உயிருக்கு ஆபத்தான நோய்களை நீக்கும் வருத்தினி ஏகாதசி விரதம் - பலன் பெற்றவர்கள் யார் தெரியுமா
உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தினி ஏகாதசி அன்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தால் குணமாகும்.
விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம்.வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருத்தினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும். இன்றைய தினம் ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படும் நாளில் பக்தர்கள் வருத்தினி ஏகாதசி அன்று முழு மத ஆர்வத்துடன் விரதம் மேற்கொண்டால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பவிஷ்ய புராணத்தில் வருத்தினி ஏகாதசி குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் யுதிஷ்டிரனுக்கு வருத்தினி ஏகாதசியின் பொருத்தத்தை பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார். எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மீண்டும் லாபங்களை பெறலாம் .
வருத்தினி ஏகாதசி அன்று ஒருவர் தானம் செய்ய முடிவு செய்தால், தானம் செய்பவரின் முன்னோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வருத்தினி ஏகாதசி அன்று ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது. பவிஷ்ய புராணத்தில் தானம் செய்யக்கூடிய பொருட்களின் விரிவான விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது. வருத்தினி ஏகாதசி அன்று முறையே குதிரை, யானை, நிலம், எள் தானம் செய்வது பக்தர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்து புராணங்களில், ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொடுப்பது அல்லது கன்யாதானம் செய்வது மிகப்பெரிய தானம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
வருதினி ஏகாதசி விரத மகிமை வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும் பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது.
பகவான் கிருஷ்ணர்
ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து வைகாசி தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள் என்று கேட்கிறார். அதற்கு பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தரும மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள். இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர். பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார்.